இந்த படத்துக்கு விஜயகாந்த் வேண்டாம்!.. இயக்குனரிடம் மோதி ஹிட் படத்தை மிஸ் பண்ண ஏவிஎம்!..

Vijayakanth: பொதுவாக ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு திரைப்படத்தை துவங்குவதற்கு முன் நன்றாக திட்டமிட்டு வேளையில் இறங்குவார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் பட்டுமே படத்தை தயாரிக்க வருவார்கள். குறிப்பாக படத்தின் பட்ஜெட் மற்றும் ஹிரோ இவர்தான் என்பதில் அவர்கள் எந்த காம்பரமைஸும் செய்து கொள்ளமாட்டார்கள்.

அதேபோல், தயாரிப்பு செலவையும் பார்த்து பார்த்து செய்வார்கள். 50 பேருக்கு சாப்பாடு எனில் 50 பேருக்கு மட்டும்தான் சாப்பாடு வரும். 5 பேர் சேர்த்து வந்துவிட்டால் சாப்பாடு இருக்காது. இப்படி எல்லா விஷயத்திலும் கறாராக இருந்ததால்தான் பல பெரிய இயக்குனர்களும், நடிகர்களும் அவர்கள் பக்கம் செல்வதில்லை.

இந்த காரணத்தால்தான் கடந்த பல வருடங்களாக ஏவிஎம் நிறுவனம் படங்களே தயாரிப்பதில்லை. 50,60களில் இந்த நிறுவனம் பீக்கில் இருந்த போதும் எம்.ஜி.ஆர் கூட ஒரே ஒரு படம்தான் இவர்களின் தயாரிப்பில் நடித்தார். படத்தின் முடிவில் அவருக்கும், அந்த நிறுவனத்திற்கும் சில உரசல்களும் வந்தது.

80களில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜன். இவர் இயக்கிய ‘நான் பாடும் பாடல்’ படம் ஹிட் அடிக்கவே சுந்தர் ராஜனை தேடி பல தயாரிப்பாளர்கள் வந்தனர். அப்போது, எனக்கு சொந்த வீடு வாங்கி கொடுக்கும் தயாரிப்பாளருக்கு மட்டுமே நான் படம் இயக்குவேன் என அவர் சொல்ல ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. மேலும், 2 லட்சம் அட்வான்ஸும் கொடுத்துவிட்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *