வைரலான ராதிகா மெர்ச்சன்ட் போட்டோ.. குஜராத்தில் நடந்த அம்பானி வீட்டு குடும்ப நிகழ்ச்சி..!

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி பிப்ரவரி 16 அன்று குஜராத்தின் ஜாம்நகரில் ‘லகான் லக்வானு’ விழாவுடன் தொடங்கியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனும், ரிலையன்ஸ் கிரீன் எனர்ஜி அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் டிசம்பர் 2022 இல் நிச்சயதார்த்தம் நடந்தது. ராஜஸ்தானின் நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் இந்த ஜோடியின் ரோகா அதாவது நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

இதன் பின்பு திருமண நாள் எப்போது என முகேஷ் அம்பானி குடும்பம் அறிவிக்காமலேயே இருந்த நிலையில், ரிலையன்ஸ் கிரீன் எனர்ஜி ஜிகா பேக்டரியை கட்டமைக்கும் பணியில் அனந்த் அம்பானி மிகவும் பிசியாக இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் அம்பானி லீட்டின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் ராதிகா மெர்ச்சன்ட் பங்கேற்றார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை, இந்த ஜோடி திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியான குஜராத் கலாச்சாரத்தின் படி லகான் லக்வானு விழாவுடன் இவர்களின் திருமண ஏற்பாடுகள் தொடங்கியது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அதாவது Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 1, 2024 அன்று தொடங்கி மார்ச் 3, 2024 வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் அம்பானி குடும்பத்தின் கோட்டையான குஜராத் மாநில ஜாம்நகரில் நடக்க உள்ளது.

இவர்களின் திருமண அழைப்பிதழ்-ல், Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜாம்நகரில் அமைந்திருக்கும் ரிலையன்ஸ் கிரீன்ஸ்-ல் மரங்கள், விலங்குகளுக்கு மத்தியில் மார்ச் 1 -3 2024 நடக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *