சாதனைகள் என்ன: அரசுக்கு கார்கே கேள்வி

புதுடில்லி: இடைக்கால பட்ஜெட்டில், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் துன்பத்தை குறைக்க சில புதிய திட்டங்களை எதிர்பார்த்தோம்.
ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
10 ஆண்டுகளில், மோடி அரசு அளித்த வாக்குறுதிகளில், எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014ல் 4.6 சதவீதமாக இருந்த விவசாய வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு, 1.8 சதவீதமாக சரிந்தது எப்படி. காங்., ஆட்சியில், 8 சதவீதமாக இருந்த, நாட்டின் சராசரி ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், தற்போது 5.6 சதவீதமாக சரிந்தது எப்படி?கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து உள்ளது ஏன். அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பால், காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? சாமானிய மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தது பொய். கிராமப்புறங்களில் வசிப்போரின் வருவாய் மிகவும் குறைந்துள்ளது என்பது தான் உண்மை.இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்,

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *