எந்தெந்த கட்சிகள் எங்கு செல்லும் என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியவரும்..!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:-

அ.தி.மு.க. மீதான அச்சத்தால் தி.மு.க. அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. இது ஒரு தோல்வி பயம் தான். எந்தெந்த கட்சிகள் எங்கு செல்லும் என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியவரும்.

எங்கள் தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையை ஏற்று கூட்டணிக்கு வர பல கட்சிகள் தயாராக உள்ளனர். 10 நாட்களில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளது என்பது குறித்து பொதுச்செயலாளர் அறிவிப்பார்.

கூட்டணிக்காக நாங்கள் யாரிடமும் கெஞ்சவில்லை என கூறியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது காங்கிரஸ் கூட்டணி உடைவதாகத் தான் தெரிகிறது.

வரிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் என்பது போல மத்திய அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *