‘தோனிக்கு பின்னர் சிஎஸ்கே வின் கேப்டன் யார்?’ இளம் வீரரை தேர்வு செய்யும் அம்பதி ராயுடு…

தோனிக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து முன்னாள் வீரர் அம்பதி ராயுடு பதில் அளித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் சென்னை அணியின் கேப்டன் தோனி ஓய்வை அறிவிக்க கூடும் என்று விவாதங்கள் எழுந்துள்ளன.

சிலர் அவர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று கூறியுள்ளார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்த கேள்விக்கு முன்னாள் வீரர் அம்பதி ராயுடு பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

தோனிக்கு பின்னர் யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்பது குறித்து சென்னை அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. என்னிடம் கருத்து கேட்டால் அடுத்த 7-8 ஆண்டுகளுக்கு கேப்டனாக இருக்கக்கூடிய இளம் வீரரை நியமிக்க வேண்டும் என்று சொல்வேன். அணியில் என்னை பொறுத்த அளவில் ருதுராஜை கேப்டனாக நியமிக்கலாம்.

கேப்டன்ஷிப்பில் தோனிக்கு மாற்றாக யாரும் இருக்க முடியாது. இளம் வீரர்களின் திறமையை கண்டறிந்து அதனை அணியின் வெற்றிக்கு தோனி பயன்படுத்துவார். அவர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பது என் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *