ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரமாட்டேன் : கெஜ்ரிவால்..!

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்து வருவதாக கெஜ்ரிவால் அண்மையில் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 7 பேரிடம் தலா ரூ.25 கோடி பேரம் நடைபெற்றிருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியது தொடர்பான ஆதாரங்களை அளிக்குமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அளித்தனர். மேலும் விசாரணையையும் குற்றப்பிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பா.ஜ.க.வில் சேருமாறு தன்னை சிலர் கட்டாயப்படுத்தியதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எனக்கு எதிராக எந்த ஒரு சதி திட்டத்தையும் தீட்டலாம். நானும் உறுதியாக இருக்கிறேன். நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கப் போவது இல்லை. பா.ஜ.க.வில் சேர்ந்து விடுங்கள். விட்டு விடுகிறோம் என்று என்னிடம் கூறினார்கள்.

ஆனால், ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரமாட்டேன் என்று அவர்களிடம் நான் திட்டவட்டமாக கூறினேன். நான் ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரப்போவதே இல்லை என்று கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *