உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர காலபைரவரை இந்த நாளில் வணங்குங்கள்..!

காக்கும் கடவுள் காலபைரவரை வழிபட ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி. 2024 பிப்ரவரி 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலஷ்டமியைக் கொண்டாடுவார்கள். சனிபகவானின் குரு காலபைரவர் என்பதால் இன்றைய தினம் பைரவரை வழிபட சனி தோஷங்களும், சகல தோஷங்களும் நீங்கும். கால பைரவர் வழிபாடு நம்மை எல்லா வகையான கெடுதல்களில் இருந்தும் காப்பாற்றும். கால பைரவர் வழிபாடு நமக்கு அரண் போன்றது. பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்..

வேத பஞ்சாங்கத்தின்படி, தை மாதத்தின் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதி பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை மாலை 04:02 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் திதி அடுத்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை 05:20 மணிக்கு முடிவடைகிறது.

மிகவும் புனிதமானது

கால பைரவரை வழிபடவும், அந்த இறைவனுக்காக விரதம் இருக்கவும் காலஷ்டமி மிகவும் உகந்த நாள் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அன்றைய தினம் விரதமிருந்து, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்வதால், அகால மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம், சனி மற்றும் ராகுவின் பாதகமான பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று பண்டிதர்கள் கூறுகின்றனர்.

கால பைரவர் தந்திர-மந்திரம், விஞ்ஞானங்களில் தேர்ச்சி பெற்றவர். காலஷ்டமியன்று இவரை வழிபடுவதால் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும். அதுமட்டுமின்றி, எதிரிகளை வெல்வார், எதிர்மறை சக்திகளில் இருந்து நிவாரணம் பெறுவார் என்கின்றனர் பண்டிதர்கள். காலஷ்டமி அன்று கால பைரவரை வழிபட சிறந்த நேரங்கள் எப்பொழுது என்று பார்ப்போம்.

பிரம்ம முஹூர்த்தம்

இந்த பிரம்ம முகூர்த்தம் ஆன்மீக நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான பிரபஞ்ச சக்தியாகும். இந்த சிறந்த நேரம் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 5:24 முதல் 6:17 வரை ஆகும்.

அபிஜீத் முஹூர்த்தம்

அபிஜீத் முஹூர்த்தம் நண்பகலில் விழுகிறது. இந்த காலகட்டத்தில் சூரியன் அதன் உச்சத்தில் இருக்கும். தெய்வீக ஆற்றல் மிகவும் தெளிவாக உள்ளது. இந்த தருணம் பிப்ரவரி 2 ஆம் தேதி மதியம் 12:13 முதல் 12:57 மணி வரை இருக்கும்.

நிஷித காலம்

இது நடுநிசி. இந்த நேரத்தில் மிகவும் இருட்டாக இருக்கிறது. பிரபஞ்ச ரகசியங்கள் வெளிப்படும். இது பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 12:08 மணி முதல் 1:01 AM வரை இருக்கும்.

காலஷ்டமி விரதம் ஒரு மங்களகரமான விரதமாகும்

காலை திதியை கணக்கில் எடுத்துக்கொள்வதால், கலாஷ்டமி விரதத்தை அனுசரிப்பவர்கள் பிப்ரவரி 2 முதல் விரதம் இருக்க வேண்டும்.

மேலும் கால பைரவரை வழிபட, “ஓம் காலபைரவாய நம” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். அந்தக் கடவுளின் மகிமையையும் கருணையையும் போற்றும் எட்டு பாசுரங்கள் கொண்ட காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்ய வேண்டும்.

பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம்.

பலன்கள்

கண்ணுக்குத் தெரிகிற எதிரிகளையும் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்து நம்மை வாழவைத்து அருளுவார் காலபைரவர். முன் ஜென்ம வினைகளின் வீரியத்தைக் குறைத்து, பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார். பக்கத்துணையாக இருப்பார் பைரவர் என்று ஆச்சார்யர்கள் விவரிக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *